Published : 28 Oct 2021 03:06 AM
Last Updated : 28 Oct 2021 03:06 AM
புகழ்பெற்ற காந்தியவாதியான சேலம் நஞ்சுண்டையா சுப்பாராவ் (93) பெங்களூருவில் 1929-ம் ஆண்டு வழக்கறிஞர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தார். காந்தி சாகித்ய சங்கா என்ற பெயரில் சமூக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார்.
சட்டப் படிப்புக்கு பிறகு 1951-ல் காங்கிரஸ் சேவா தளத்தில் இணைந்தார். நேரு, காமராஜர் உள்ளிட்ட தேசியத் தலைவர்களின் அன்பை பெற்றிருந்தார். ம.பி. சம்பல் பள்ளத்தாக்கில் காந்தி சேவா ஆசிரமம் தொடங்கி கொள்ளையர்களுடைய குடும்பங்களின் மறுவாழ்வுக்காக பாடுபட்டார். இந்நிலையில், காந்தியவாதி எஸ்.என்.சுப்பாராவ் (93) ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மருத்துவமனையில் நேற்று காலை காலமானார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கேட்டுக்கொண்டதன் பேரில் சுப்பாராவ் சிகிச்சைக்காக ராஜஸ்தான் வந்தார். பிறகு இங்கேயே தங்கிவிட்டார். சுப்பா ராவின் மறைவுக்கு கெலாட் உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT