Published : 20 Dec 2020 03:13 AM
Last Updated : 20 Dec 2020 03:13 AM
மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் இணைந்து உள்நாட்டிலேயே பிரத்யேக தடுப்பு மருந்து உருவாக்கி உள்ளனர். இந்தத் தடுப்பு மருந்துகள் இந்தியாவில் அடுத்த 6-7 மாதங்களில் 30 கோடி பேருக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.
கரோனா தடுப்பு குறித்த 22-வதுஅமைச்சர்கள் கூட்டத்தில் பேசியபோது அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறும்போது, ‘‘இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கு கரோனா பாதிப்புஏற்பட்டுள்ளது. இதில் 95 லட்சத்துக்கும் மேலானோர் குணமடைந்துள்ளனர். உலகிலேயே இந்தியாவில்தான் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் விகிதம் அதிகபட்சமாக 95.46 சதவீதமாக உள்ளது’’ என்றார்.
இதற்கு பிரதமர் மோடியின் நிர்வாகத் திறன்தான் காரணம். நோய்த்தொற்று கண்காணிப்பு, தடுப்புநடவடிக்கைகள், மக்களுக்குத் தேவையான உதவிகள், தடுப்புமருந்து கண்டுபிடிப்பு மற்றும் சுகாதார ஏற்பாடுகள் என அனைத்தும் திறம்பட செயல்படுத்தப்பட்டன. இத்தகைய கரோனா பேரழிவு நெருக்கடி காலத்தில் திறம்பட செயல்பட்டு முன்மாதிரி தலைவராகத் திகழ்கிறார் என்றும் பிரதமர் மோடியை அவர் புகழ்ந்தார்.
தற்போது தடுப்பு மருந்து விநியோகத்தை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த ஆறு மாதங்களில் 30 கோடி பேருக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT