Published : 15 May 2015 12:01 PM
Last Updated : 15 May 2015 12:01 PM
ஆந்திராவில் பின்தங்கிய 2,400 கிரமாங்களை தத்தெடுத்து, அதனை மேம்படுத்தும் திட்டங்களை நடத்த அமெரிக்க வாழ் இந்தியர்கள் முடிவெடுத்துள்ளனர்.
அமெரிக்க நகரங்களான லாஸ் ஏஞ்செல்ஸ், சான்ஜோஸ், சிகாகோ, நியூயார்க், நியூஜெர்சி, வாஷிங்டன், போர்ட்லாந்த் மற்றும் டால்லாஸ் ஆகிய நகரங்களில் உள்ள இந்தியர்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் சந்தித்து பேசினார்.
இந்த சந்திபின்போது ஆந்திராவில் உள்ள கிராமங்களை மேம்படுத்த அங்கு முதலீடு செய்ய வலியுறுத்தினார்.
இதன் அடிப்படையில், 'ஸ்மார்ட் வில்லேஜ் - ஸ்மார்ட் வார்ட்' என்ற திட்டத்தின் மூலம் அமெரிக்க வாழ் இந்தியர்கள், ஆந்திர மாநிலத்தில் உள்ள பின்தங்கிய 2,417 கிராமங்களை தத்தெடுக்க முடிவு முடிவு செய்துள்ளனர்.
நாட்டிலேயே முதல்முறையாக அதிக அளவில் கிராமங்களை வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தத்தெடுக்கும் முயற்சிக்கு இந்தத் திட்டம் முன்னோட்டமாக கருதப்படுகிறது.
"இந்தியாவிலேயே தவிர்க்க முடியாத மாநிலமாக ஆந்திரம் உருவாகப் போகும் நாள் தூரத்தில் இல்லை. இந்தியாவுக்கே முன்மாதிரி திட்டமாக அமையும்" என்று வெளிநாட்டு வாழ் தெலுங்க மக்கள் மத்தியில் பேசிய நாரா லோகேஷ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT