Published : 05 Feb 2015 03:31 PM
Last Updated : 05 Feb 2015 03:31 PM

அமித் ஷா சர்வாதிகார அரசியலுக்கு அஞ்சமாட்டேன்: அரவிந்த் கேஜ்ரிவால் ஆவேசம்

சர்வாதிகார அரசியலை செய்துவரும் பாஜக தலைவர் அமித் ஷாவைக் கண்டு அஞ்சவில்லை என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறினார்.

டெல்லியில் நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதனால் மும்முனைப் போட்டியில் இருக்கும் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளன.

இன்று காலை 9 மணிக்கு ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சார பேரணி துவங்கியது. டெல்லியின் மந்திர் மார்க் என்ற இடம்வரை செல்ல ஏற்பாடு செய்திருந்த பேரணியில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் கலந்துகொண்டார். வழி எங்கும் ஆதரவாளர்களுடம் செல்ஃபி எடுத்துக்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பாஜக தலைவர் அமித் ஷா சர்வாதிகாரியாக செயல்பட்டு அரசியல் நடத்துகிறார். அவரைக் கண்டு நாங்கள் அஞ்சவில்லை.

கடந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அடைந்த வெற்றியை ஆம் ஆத்மி மீண்டும் தக்க வைக்கும்" என்றார். பின்னர் நடைப் பயணமாக சென்ற கேஜ்ரிவால் பலிக்கா தாம் பகுதியில் துப்புரவு தொழிலாளர்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x