Published : 13 Jan 2015 01:21 PM
Last Updated : 13 Jan 2015 01:21 PM
கேரள மாநிலம் கோட்டயத்தில் 16 பேர் இந்து மதத்துக்கு திரும்பியுள்ளனர்.
மறுமதமாற்ற நிகழ்ச்சிக்கு சில இந்து அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறும்போது, "ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 16 பேர் மறுமதமாற்றம் செய்து கொண்டனர்" என்றார்.
கடந்த டிசம்பர் 25-ம் தேதி கிறுஸ்துமஸ் நாளில், கேரளாவில் 58 பேர் கிறுத்துவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு திரும்பினர் என்பது கவனிக்கத்தக்கது. கர் வாப்ஸி என்ற இந்த மறுமதமாற்ற நிகழ்ச்சிக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT