Published : 12 Jan 2015 10:44 AM
Last Updated : 12 Jan 2015 10:44 AM
சுனந்தா புஷ்கர் இறப்பு விவகாரம் சூடு பிடித்து வரும் இந்த வேளையில், அதுகுறித்த விசாரணைக்காக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் நேற்று டெல்லி சென்றுள்ளார்.
டெல்லியில் அவர் குடி யிருக்கும் லோதி எஸ்டேட் வீட்டின் முன்பு அவரின் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர், "போலீஸ் விசாரணைக்காக ஒத்துழைக்க வேண்டியது என்னுடைய கடமை. இந்த விசாரணையை எந்த வகையிலும் தடை செய்ய நான் முயற்சிக்க மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT