Published : 24 Jan 2015 10:48 AM
Last Updated : 24 Jan 2015 10:48 AM
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதி மன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமார சாமி முன்னிலையில் நேற்று விசா ரணைக்கு வந்தது. ஜெயலலிதா தரப்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ் ஆஜரானார்.
அப்போது அவர் ஜெயலலிதா வின் சொத்து விவரங்கள் அடங்கிய பட்டியலை தாக்கல் செய்தார். அதில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கூறியுள்ள ரூ.66.65 கோடியைவிட அதிகமாக ஜெய லலிதாவிடம் சொத்துகள் இருந்தது. அவருடைய சேமிப்பு கணக்கில் இருந்த ரூ.97 லட்சம் கணக்கில் சேர்க்கப்படவில்லை. சசிகலா, சுதா கரனுக்கு சொந்தமானதையும் ஜெய லலிதா கணக்கில் சேர்த் துள்ளனர் என தெரிவித்து இருந்தார்.
பவானி சிங் கடும் எதிர்ப்பு
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “இந்த பட்டியலில் கூறியுள்ள விவரங்களை விசாரணை நீதி மன்றத்தில் தாக்கல் செய்தீர்களா? அதற்கான ஆதாரத்தை தாருங்கள்” என்றார். இதனால் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் செந்தில், அசோகன், பன்னீர்செல்வன் உள் ளிட்டோர் பல்வேறு பைகளில் நீண்ட நேரம் தேடினர். அதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை.
எனவே அரசு வழக்கறிஞர் பவானி சிங், “தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள சொத்துப்பட்டி யல் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. ஜெயலலிதாவை தவிர மற்ற மூவ ருக்கும் அதிக சொத்துக்கள் இல்லை. இவையெல்லாம் விசா ரணை நீதிமன்றத்தில் ஆதாரங் களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் நான் ஜெய லலிதாவின் சொத்து பட்டியலை தாக்கல் செய்கிறேன்” என்றார்.
இதையடுத்து, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரி சம்பந்தத்தை அழைத்து, “ஜெய லலிதாவின் முழுமையான சொத்துப் பட்டியல் எங்கே? இங்கே கூறி யுள்ள ரூ.97 லட்சம் பற்றி விசா ரணை நீதிமன்றத்தில் தெரிவித்துள் ளார்களா?” என நீதிபதி வின வினார். அதற்கு சம்பந்தமும், பவானி சிங்கும், ஜெயலலிதா வழக்கறிஞர்களும் பதில் அளிக்க முடியாமல் திணறினர்.
நீதிமன்றத்தில் கடும் மோதல்
இதனால் திமுக பொதுச்செய லாளர் அன்பழகன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணனிடம் நீதிபதி கேட்டார். அதற்கு அவர், “தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் சொத்து பட்டியல் தவறானது. சொத்துகளின் விவரம் குறித்து ஓய்வு பெற்ற விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடுவுக்குதான் முழுமையாக தெரியும்” என்றார்.
அப்போது கோபமடைந்த அரசு வழக்கறிஞர் பவானி சிங், “நீங்கள் யார்? வழக்கில் ஏன் தேவை யில்லாமல் தலையிடுகிறீர்கள்?” என்றார். அதற்கு திமுக வழக்கறிஞர் சரவணன், “நீங்கள் கர்நாடக அரசின் ஆணையில்லாமல் ஆஜராகி வருகிறீர்கள். நீதிபதி என்னிடம் கேட்டதால் பதில் சொன் னேன். விசாரணை நீதிமன்றத்தில் அரசு தரப்பு எந்த தகவலும் தெரி விக்கவில்லை. திமுக சார்பில் அனைத்து முக்கிய விவரங்களை யும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்திருக்கிறோம்” என்றார்.
அரசு - திமுக வழக்கறிஞர்கள் கடும் வாக்குவாதம் செய்ததால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் தனது வாதத்தை முடித்துவிட்டார். இதற்கு பிறகு மீதமுள்ள தகவல்களை முன்வைத்து பி.குமார் ஓரிரு நாட்கள் வாதிடுவார். அதன்பிறகு சசிகலா தரப்பின் வாதம் தொடரும் என நீதிபதியிடம் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு (ஜன.27) ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் திமுகவை வழக்கில் 3-ம் தரப்பாக சேர்க்கக் கோரிய மனு மீது விசாரணை நடைபெறும் என நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT