Published : 20 Jan 2015 02:22 PM
Last Updated : 20 Jan 2015 02:22 PM
பாஜக பொய்கள் கூறும், வதந்திகள் பரப்பும் இயந்திரம் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் சாடியுள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 7-ல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய தனது ஆதரவாளர்களுடன் சென்றார் கேஜ்ரிவால்.
டெல்லி தேர்தலை முன்னிட்டு சாலையோர பிரச்சாரத்தை அவர் துவக்கினார். அப்போது அவர்: "பாஜக பொய்கள் கூறும், வதந்திகள் பரப்பும் இயந்திரம். சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை வெற்றி பெறச் செய்து டெல்லி மக்கள் சரித்திரம் படைப்பர். 49 நாட்கள் நடந்த நல்லாட்சி 5 ஆண்டுகளுக்கு நீடிக்க அவர்கள் வாய்ப்பளிப்பார்கள்" என்றார்.
தேர்தல் பிரச்சாரத்தில், பெண்கள் பாதுகாப்பு, ஜன் லோக்பால் விவகாரங்கள் குறித்து கேஜ்ரிவால் பேசுவார் என கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT