Published : 22 Jan 2015 09:27 AM
Last Updated : 22 Jan 2015 09:27 AM

உ.பி.யில் முன்னாள் காவல்துறை உயரதிகாரி பா.ஜ.க.வில் சேர்ந்தார்

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் டி.ஜி.பி. பிரிஜ்லால், பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை அவர் விமர்சித்துள்ளார்.

பா.ஜ.க.வின் தேசியவாதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் சேர்ந்துள்ளதாகக் கூறும் பிரிஜ்லால், ஒரு காலத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு நெருக்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் செயல்பட்டு வந்த மாபியா கும்பல்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கை களுக்காக மக்களிடையே பரவலான பாராட்டைப் பெற்ற இவர், சமீபத்தில் ஓய்வு பெற்றார்.

இவருடன் க்யான் சிங் என்ற மற்றொரு காவல்துறை உயரதிகாரியும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து மாநிலத்தின் கட்சி விவகாரப் பொறுப்பாளர் ஓம் மதூர் கூறும்போது, "மற்ற கட்சிகளின் கொள்கைகளில் வெறுப் படைந்த பலர் பா.ஜ.க.வில் இணை கிறார்கள்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x