Published : 20 Jan 2015 01:50 PM
Last Updated : 20 Jan 2015 01:50 PM

விஜயவாடாவில் காஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சித்திநகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் பலியாகினர், 8 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் மேலும் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

காஸ் கசிவு விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x