Published : 21 Jan 2015 09:43 AM
Last Updated : 21 Jan 2015 09:43 AM
குஜராத் மாநிலம் அகமதாபாதில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
இந்தியாவில் விமான போக்குவரத்துத் துறை மிக வேகமாக வளர்ச்சியடையும் வாய்ப்பு உள்ளது, எனவே இந்திய விமான நிலையங்களை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், அகமதாபாத் ஆகிய 4 விமான நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT