Published : 14 Dec 2014 03:13 PM
Last Updated : 14 Dec 2014 03:13 PM
பிஹாரில் 70 வயது மூதாட்டி ஒருவர் தனது கணவர் சிதையில் விழுந்து 'சதி விரதம்' மேற்கொள்வதாக தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், "சஹர்ஸா மாவட்டம் பர்மானியா கிராமத்தைச் சேர்ந்தவர் கவஹா தேவி. இவர், தனது கணவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக மயானத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அவரது கணவர் எரிக்கப்பட்ட சிதையில் விழுந்து அவரும் தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக கிராமவாசிகள் சிலர் சாட்சியம் தெரிவித்துள்ளனர். சிதையில் விழுந்த கவஹா தேவியை மீட்க உறவினர்கள் முற்படவில்லை எனக் கூறப்படுகிறது" என்றார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கும் கவஹா தேவியின் மகன், "என் தாயார் மாரடைப்பில் உயிரிழந்தார். அவரை என் தந்தையின் சிதையில் சேர்த்து தகனம் செய்தோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT