Published : 23 Dec 2014 01:27 PM
Last Updated : 23 Dec 2014 01:27 PM
நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படையான மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎப்) புதிய இயக்குநர் ஜெனரலாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிரகாஷ் மிஷ்ரா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
சிஆர்பிஎப் இயக்குநர் ஜெனரலாக இருந்த திலிப் திரிவேதி கடந்த மாதம் 30-ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, மிஷ்ராவின் நியமனம் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், டெல்லியில் உள்ள சிஆர்பிஎப் தலைமை அலுவலகத்துக்கு வந்த அவர் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
1977-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான மிஷ்ரா, இதுவரை மத்திய உள் துறை அமைச்சகத்தில் சிறப்பு செயலாளராக (உள் விவகார பாதுகாப்பு) பணியாற்றி வந்தார். இவர் ஒடிஸா மாநில காவல் துறை தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
சுமார் 3 லட்சம் வீரர்களைக் கொண்ட சிஆர்பிஎப் படையின் முக்கியப் பணி நக்ஸல்களை ஒழிப்பதாகும். ஒடிஸா மாநில காவல் துறை தலைவராக இருந்தபோதே நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கையில் மிஷ்ரா ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2016-ம் ஆண்டு பிப்ரவரி வரை மிஷ்ரா இந்தப் பதவியில் நீடிப்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT