Published : 17 Dec 2014 10:55 AM
Last Updated : 17 Dec 2014 10:55 AM
2013-ம் ஆண்டு இறுதி நிலவரப்படி, நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் 382 மரண தண்டனை கைதிகள் தண்டனைக்கு காத்திருப்பதாக மக்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பரதிபாய் சவுத்ரி எழுத்து மூலம் அளித்த பதில்:
மரண தண்டனை கைதிகளுக்கு கருணையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் மன்னிப்பு வழங்க அரசியல் சட்டத்தின் 72-வது பிரிவு வகை செய்கிறது. இப்பிரிவின் கீழ் கடந்த 34 ஆண்டுகளில்123 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பரிசீலிக்கப்பட்டன.
இவற்றில் சண்டீகரைச் சேர்ந்த பல்வந்த்சிங் ரஜோனா, அசாமைச் சேர்ந்த மன் பகதூர் திவான், கேரளத்தைச் சேர்ந்த அந்தோனி ஆகிய 3 பேரின் மனுக்கள் தவிர மற்ற அனைத்தும் முடித்து வைக்கப்பட்டன. இந்த மனுக்களை பரிசீலித்து முடிவு எடுக்க காலக்கெடு ஏதுமில்லை. என்றாலும் இவை இயன்றவரை விரைந்து முடித்து வைக்கப்படுகின்றன. இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT