Published : 10 Dec 2014 12:52 PM
Last Updated : 10 Dec 2014 12:52 PM
ஆந்திர மாநில புதிய தலைநகர் அமைக்க, சிங்கப்பூர் நிபுணர்களால் 6 மாதங்களில் மாஸ்டர் பிளான் வடிவமைக்கப்பட்டு விடும் என நகர வளர்சித் துறை அமைச்சர் நாராயணா தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்தின் தலைநக ருக்காக சிங்கப்பூர் நிபுணர் குழுவின ருடன் நேற்று ஹைதராபாத்தில், ஆந்திர நகர வளர்ச்சி துறை அமைச் சர் நாராயணா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. பின்னர் அமைச்சர் நாராயணா செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்னமும் 6 மாதங்களில் தலைநகரின் 'மாஸ்டர் பிளான்' தயாராகி விடும்.
தலைநகர் அமைய உள்ள இடத்தில் ஹெலிகாப்டர் மூலம் விரைவில் 'ஏரியல் சர்வே' செய்யப்பட உள்ளது. மேலும் தலைநகர் அமைக்க 6 பேர் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் நாராயணா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT