Published : 18 Dec 2014 11:55 AM
Last Updated : 18 Dec 2014 11:55 AM

இந்திய மீனவர்களின் 87 படகுகளை பிடித்துவைத்துள்ளது இலங்கை அரசு: மக்களவையில் அமைச்சர் தகவல்

இந்திய மீனவர்களுக்கு சொந்தமான 87 மீன்பிடி படகுகளை இலங்கை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக மக்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி மக்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியதாவது:

டிசம்பர் 12-ம் தேதி நிலவரப்படி இந்திய மீனவர்களுக்குச் சொந்த மான 87 படகுகளை கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது பறிமுதல் செய்து தனது கட்டுப்பாட் டில் இலங்கை அரசு வைத்துள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள் ளோம். இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் 3, 4-வது பிரிவு

மக்களவையில் மத்திய அணுசக்தித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியதாவது: கூடங்குளம் அணு மின்நிலையத்தின் 3, 4-வது அணு உலைகளை அமைக்கும் பணி 2015 - 2016-ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அணு உலைகளை அமைக்கும் பணிகள் முடிவடைந்த பின்பு, மின் உற்பத்தி 2020 - 2021-ல் தொடங்கும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x