Published : 12 Dec 2014 11:29 AM
Last Updated : 12 Dec 2014 11:29 AM
தீவிரவாதத் தாக்குதல்களால் வாக்காளர்கள் யாரும் முடங்கிக் கிடக்கவில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் அதிகரித்து வரும் வாக்கு சதவீதமே இதற்கு உதாரணம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
மாநிலத்தில் நடைபெறும் தேர்தலைச் சீர்குலைக்க தீவிர வாதிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. தீவிரவாதத் தாக்குதலையும் தாண்டி இங்கு வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. வாக் களிக்க மக்கள் நிறைய பேர் ஆர்வமுடன் வந்தார்கள். இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிறது.
டிசம்பர் 14, 20 தேதிகளில் அடுத்த கட்ட தேர்தல்கள் நடைபெற வுள்ளன. அவற்றைச் சீர்குலைக்க வும் தீவிரவாதிகள் முயற்சிக்கலாம். ஆனால் அது குறித்து நாங்கள் எச்சரிக்கை யாக இருக்கிறோம்.
ராணுவத்தினர் இழப்புகளை சந்தித்தாலும் பாதுகாப்பு விஷ யத்தில் பொறுப்பாக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT