Published : 28 Dec 2014 12:40 PM
Last Updated : 28 Dec 2014 12:40 PM

விஜயவாடாவில் துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு

விஜயவாடாவில் துப்பாக்கி தொழிற்சாலை இயங்கி வந்ததை போலீஸார் நேற்று கண்டுபிடித்தனர். அங்கிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் உதிரி பாகங்களை பறிமுதல் செய்த போலீஸார், இதுதொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் விரைவில் விஜயவாடா-குண்டூர் இடையே அமைய உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நெல்லூரைச் சேர்ந்த சரத் ரெட்டியை மேற்கு கோதாவரி மாவட்ட போலீஸார் கைது செய்தனர். பி.டெக் பொறியியல் கல்லூரி மாணவரான இவர், நக்ஸலைட்டுகளுக்கு ஆயுதங்களை வினியோகம் செய்து வருவது விசாரனையில் தெரிய வந்தது.

இவர் கொடுத்த தகவலின் பேரில், விஜயாவாடா ஆட்டோ நகர் பகுதியில் உள்ள லட்சுமி துர்கா இன்ஜினீரிங் ஒர்க்ஸ் (இரும்பு) தொழிற்சாலையில் ஏலூர் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான துப்பாக்கிகள், தோட் டாக்கள் மற்றும் துப்பாக்கி உதிரி பாகங்கள் கிடைத்துள்ளன.

இது தொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரித்து வரு கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x