Last Updated : 05 Dec, 2014 07:36 PM

 

Published : 05 Dec 2014 07:36 PM
Last Updated : 05 Dec 2014 07:36 PM

பிணங்களைத் திருடி மருந்து தயாரிக்கும் கும்பலா? பிஹாரில் ஒருவர் கைது

பிஹாரில் இடுகாடு ஒன்றிலிருந்து பிணத்தைத் தோண்டி எடுத்தபோது கையும் களவுமாக பிடிபட்ட நபர் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கதிஹார் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த மாதம் புர்னியா மாவட்டத்தில் 5 உடல்களை தோண்டி எடுத்துச் சென்றதையடுத்து, உடல் உறுப்புகளை விற்றுப் பிழைக்கும் கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

இன்று கைது செய்யப்பட்ட அனிமேஷ் மண்டல் போலீஸ் வாக்குமூலத்தில் கூறும்போது கூறியதாக போலீஸ் தரப்பினர் தெரிவித்ததாவது: உடல்களை திருடும் பழக்கம் உண்டு என்றும், அதன் எலும்புகள் மற்றும் மூளையை எடுத்து சிறப்பு மருந்துகளைத் தயாரிக்கப் பயன் படுத்துவதாகவும், மேலும் சடங்குகளுக்கும் பயன்படுத்துவதாகவும் கூறியதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து மாவட்ட போலீஸ் அதிகாரி சுரேஷ் மாஞ்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்ந்து இடுகாடுகளிலிருந்து பிணங்கள் காணாமல் போவதாக தங்களுக்கு தகவல் வந்து கொண்டிருப்பதாகவும் தற்போது கைது செய்யப்பட்ட அனிமேஷ் மண்டல் என்பவருக்குப் பின்னால் கும்பல் ஒன்று செயல்படலாம் என்றும் இது பெரிய வலைப்பின்னலாகவும் இருக்கலாம் என்றும் அதிகாரி சுரேஷ் மாஞ்சி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x