Published : 02 Dec 2014 11:15 AM
Last Updated : 02 Dec 2014 11:15 AM
ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இன்று 2-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இரு மாநில தேர்தலிலும் மக்கள் பெருமளவில் பங்கேற்று வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: "இரு மாநில தேர்தலிலும் மக்கள் பெருமளவில் பங்கேற்று வாக்களிக்க வேண்டும் என வேண்டுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
ஜார்க்கண்டில் 20 தொகுதிகளிலும், காஷ்மீரில் 18 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT