Published : 18 Dec 2014 12:17 PM
Last Updated : 18 Dec 2014 12:17 PM

மதரசாக்களில் தீவிரவாத பயிற்சியா?- அமைச்சர் விளக்கம்

மதரசாக்களில் தீவிரவாத பயிற்சி தரப்படுவது பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பரதிபாய் சவுத்ரி மாநிலங்களவையில் நேற்று கூறியதாவது:

நாட்டில் உள்ள மதரசாக்களில் தீவிரவாத பயிற்சி தரப்படுவதாக கூறப்பட்டாலும் அதுகுறித்து அரசுக்கு எந்த தகவலும் கிடைக்க வில்லை. ஆனாலும் மேற்குவங்க மாநிலம் புர்த்வானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு குறித்த விசா ரணையில், வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர் கள் கட்டுப்பாட்டில் உள்ள 3 மதர சாக்களில் மத தீவிரவாதம் போதிக் கப்படுவது தெரியவந்துள்ளது.

ராஜஸ்தான் மாநில எல்லை யில் மதரசாக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. எனினும், அங்கு தேசவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

நாடு முழுவதும் குறிப்பாக எல்லை பகுதியில் உள்ள மதரசாக்களை கண்காணிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x