Published : 25 Nov 2014 10:50 AM
Last Updated : 25 Nov 2014 10:50 AM

தேர்தலில் வாக்களிக்க காஷ்மீர், ஜார்கண்ட் இளைஞர்களுக்கு மோடி அழைப்பு

ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர்தலில் அதிகளவிளான மக்கள் பங்கேற்று வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறிப்பாக தேர்தல் நடைபெறும் இரண்டு மாநிலங்களிலும் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்று வாக்களிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது: "ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், இவ்விரு மாநிலத்தைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பாக இளம் நண்பர்கள் தேர்தலில் பெருமளவில் பங்கேற்று வாக்களிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x