Last Updated : 17 Nov, 2014 01:07 PM

 

Published : 17 Nov 2014 01:07 PM
Last Updated : 17 Nov 2014 01:07 PM

பிரதமர் மோடியால் கெடுகிறது தூக்கம்- வெங்கய்ய நாயடு

பிரதமர் நரேந்திர மோடி தனது பணிகளில் இணக்கமாக செயல்படுவதாகவும், அவர் தானும் தூங்காமல் மற்றவர்களையும் தூங்கவிடுவதில்லை என்றும் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

பிரதம மந்திரி ஜன் தன் யோஜ்னா திட்டம் தொடங்கப்பட்டு 7 வாரம் நிறைவுபெற்றதை அடுத்து, இதற்கான நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாதில் நடைபெற்றது.

இதில், அனைவருக்கும் வங்கி கணக்கு ஏற்படுத்தும் நோக்கம் மற்றும் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும் அதிகாரிகளுடன் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு மற்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி தூங்குவதும் இல்லை, எங்களை தூங்க விடுவதும் இல்லை. ஆனால் எங்களுக்கு இந்த காலை நேர தூக்கம் இல்லாமல் போனது பெரிதாக தெரியவில்லை.

மக்களுக்காக செயல்படுகிறோம் என்பதில் பெருமையாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் உள்ளது. பிரதமர் தனது பணிகளில் இணக்கமாக செயல்படுகிறார். மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு எந்த நேரத்திலும் உழைக்க நாங்கள் தயாராக காரணம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x