Published : 24 Nov 2014 09:51 AM
Last Updated : 24 Nov 2014 09:51 AM

ஹைதராபாத்தில் அமைகிறது உலகின் உயரமான கட்டிடம்: தெலங்கானா அரசு முடிவு

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திலிருந்து பிரிந்த தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களும் தலைநகரை அழகாக்குவது குறித்து அதிக அக்கறை செலுத்தி வருகின்றன.

இதன்படி விஜயவாடா-குண்டூர் இடையே கிருஷ்ணா நதிக்கரையின் இரு புறமும் புதிய தலைநகரை மிக அழகாக அமைக்க ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு திட்டமிட்டுள்ளார்.

இதேபோல் தெலங்கானா அரசும் ஹைதராபாத்தை அழகுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஹுசைன் சாகர் ஏரியைச் சுற்றிலும் 40 முதல் 60 கட்டிடங்களைக் கட்ட முடிவு செய்துள்ளது. மேலும் சஞ்சீவய்யா பூங்கா அமைந்துள்ள இடத்தில் உலகின் மிக உயரமான கட்டிடத்தைக் கட்ட முடிவெடுத்துள்ளது.

தற்போது துபாய் நாட்டில் உள்ள புர்ஜ் கலிபா கட்டிடம்தான் உலகிலேயே உயரமானதாக உள்ளது. 828 மீட்டர் உயரம் கொண்ட இந்த வானளாவிய கட்டிடம், 163 தளங்களைக் கொண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x