Last Updated : 27 Nov, 2014 11:35 AM

 

Published : 27 Nov 2014 11:35 AM
Last Updated : 27 Nov 2014 11:35 AM

மேகாலயாவில் முதல் ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார் மோடி

மேகாலயாவில் முதன்முறையாக வரும் 29-ம் தேதி ரயில் போக்கு வரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து வடக்கு கரோ ஹில்ஸ் மாவட்ட துணை ஆணையர் டி.சங்மா கூறும்போது, “வடக்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள மெந்திபத்தார் - அசாம் மாநிலத் தின் மலிகான் இடையே ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி வரும் 29-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இது மாநிலத்தின் முதல் ரயில் போக்குவரத்து ஆகும். பின்னர் கரோ பகுதி மக்களுடன் விடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்ற உள்ளார்” என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x