Published : 25 Nov 2014 09:53 AM
Last Updated : 25 Nov 2014 09:53 AM
பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதாபென், தனக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து ஆர்.டி.ஐ. சட்டத்தில் தகவல் கோரியுள்ளார்.
3 பக்க மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நான் பிரதமரின் மனைவி. அந்த வகையில் எனக்கு என்னென்ன சலுகைகள் உள்ளன. நான் பொது போக்குவரத்தையே பயன்படுத்தி வருகிறேன். ஆனால் எனது பாதுகாவலர்கள் அரசு வாகனங்களில் என்னை பின் தொடர்கின்றனர்.
என்னை சுற்றி பாதுகாப்பு வளையம் இருப்பதால் சில நேரங்களில் அச்சப்பட வேண்டி யுள்ளது. எனக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முழுமையான தகவல்களை அளிக்க வேண்டும். இவ்வாறு தனது மனுவில் கோரியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT