Published : 14 Nov 2014 11:10 AM
Last Updated : 14 Nov 2014 11:10 AM
நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 125-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நேருவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ட்விட்டரில் அவர் கூறியதாவது, "நேருவுக்கு எனது அஞ்சலியை உரித்தாக்குகிறேன். சுதந்திரப் போராட்டத்தில் நேருவின் பங்கினையும், நாட்டின் முதல் பிரதமராக அவரது பங்களிப்பையும் நாம் இன்று நினைவு கூர்வோம்" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT