Published : 29 Nov 2014 10:32 AM
Last Updated : 29 Nov 2014 10:32 AM
சேலத்தில் 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக திமுக பிரமுகர் சுரேஷ்குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சேலத்தை அடுத்த தாசநாயக்கன்பட்டி சவுடாம்பிகா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் 2010 ஆகஸ்ட் 12-ம் தேதி கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் திமுக பிரமுகர் சுரேஷ் குமாரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த ஜனவரியில் அவரை வழக்கில் இருந்து விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சிபிசிஐடி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை நேற்று விசாரித்த நீதிபதி வி.கோபால கவுடா, சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு திமுக பிரமுகர் சுரேஷ் குமாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT