Published : 05 Nov 2014 03:11 PM
Last Updated : 05 Nov 2014 03:11 PM
ஆந்திர மாநிலத்தில் சமூக நலம் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் ராவேல கிஷோர் பாபு.
இவர் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறும் போது, “தெலுங்கு தேசம் கட்சி தனது கொள்கையை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. மக்களின் நலன் கருதியே எங்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்தது” என்றார்.
அமைச்சரின் இந்தக் கருத்து, தெலுங்கு தேசம் - பாஜக இடையே புதிய சிக்கலை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹைதராபாத்தில் நேற்று அமைச்சர் ராவேல கிஷோரை நேரடியாக அழைத்து கூட்டணி குறித்து பேசியது ஏன்? என கடிந்துகொண்டதுடன், தன்னைக் கேட்காமல் கூட்டணி குறித்து கட்சியில் யாரும் விமர்சிக்க கூடாது எனவும் உத்தரவிட்டதாக தெலுங்கு தேச கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT