Published : 24 Nov 2014 11:41 AM
Last Updated : 24 Nov 2014 11:41 AM
முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மாநிலங்களவை இன்று நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி தியோரா திங்கள்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 77. அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முரளி தியோரா மறைவுக்கு உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். முரளி தியோரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மாநிலங்களவை இன்று நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல், உறுப்பினர்கள் ஹேமேந்திர சந்திர சிங், கபில் கிருஷ்ண தாகூர் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மக்களவை இன்று நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT