Published : 13 Nov 2014 02:58 PM
Last Updated : 13 Nov 2014 02:58 PM
ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்டில் தேர்தலை சுமுகமாக நடத்த தேவைப்பட்டால் கூடுதல் படைகள் அனுப்பப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இரு மாநிலங்களிலும் மாநில போலீஸுக்கு உதவியாக மத்திய ரிசர்வ் போலீஸார் பணியமர்த்தப்படுவர். அதையும் மீறி அதிக பாதுகாப்பு தேவைப்பட்டால் மத்திய அரசு கூடுதல் படைகளை அனுப்பத் தயாராக இருக்கிறது என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கும்போது இதனை தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23-ம் தேதி நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT