Published : 18 Nov 2014 03:02 PM
Last Updated : 18 Nov 2014 03:02 PM

அடுத்த தேர்தலுக்கு தயாராகுங்கள்: கட்சியினருக்கு சரத் பவார் அழைப்பு

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி விரைவில் கவிழும் என்றும், அடுத்த தேர்தலுக்கு தயாராகும்படியும் தேசியவாத காங்கிரஸாருக்கு அக்கட்சியின் தலைவர் சரத் பவார் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று கூறும்போது, "தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. கூடிய விரைவில் இந்த ஆட்சி கவிழும். எனவே, மீண்டும் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்" என்று தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேசியவாத காங்கிரஸின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x