Last Updated : 14 Nov, 2014 11:18 AM

 

Published : 14 Nov 2014 11:18 AM
Last Updated : 14 Nov 2014 11:18 AM

காஷ்மீரில் என்கவுன்டர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீர் மாநிலத்தில் குல்காம் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

என்கவுன்டர் தொடர்பாக ராணுவ செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம், சென்னிகாம் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை மாலை சுற்றிவளைத்தனர். விடிய விடிய துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

பல மணி நேர துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x