Published : 20 Feb 2014 12:13 PM
Last Updated : 20 Feb 2014 12:13 PM

குற்றவாளிகளை விடுவிக்கும் முடிவு நீதிக் கொள்கைகளுக்கு எதிரானது: பிரதமர் மன்மோகன் சிங் கருத்து

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த சம்பவம், இந்தியாவின் ஆன்மா மீதான தாக்குதலாகும். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு நீதிக் கொள்கைகளுக்கு முரணானது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளர்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கை:

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் எந்தவொரு அரசும், அரசியல் கட்சியும் மென்மையான அணுகுமுறையை கொண்டிருக்கக் கூடாது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், இந்தியா வின் ஆன்மா மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலாகும். இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மிகப் பெரிய தலைவருமான ராஜீவ் காந்தியையும், அப்பாவி இந்தியர் களையும் கொன்றவர்களை விடுவிப்பது நீதி நெறிமுறை களுக்கு முரண்பாடான நிலைப்பாடாகும்.

குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு, சட்டப்படி ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. எனவே, அவர்களை விடுவிக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x