Published : 20 Dec 2013 10:38 AM
Last Updated : 20 Dec 2013 10:38 AM

மத்திய அமைச்சர் நாராயணசாமி மனைவி மரணம்: பிரதமர் இரங்கல்

மத்திய அமைச்சர் நாராயணசாமி மனைவி கலைச்செல்வி மறைவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமியின் மனைவி கலைச்செல்வி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 54.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு புதுச்சேரியில் நாளை நடைபெறவுள்ளது.

மத்திய அமைச்சர் நாராயணசாமி மனைவி கலைச்செல்வி மறைவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்து, தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமியின் மனைவி கலைச்செல்வி காலமானார் என்பதை பிரதமர் அலுவலகம் வருத்தத்துடன் அறிவிக்கிறது என்றும், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x