Published : 22 Nov 2014 10:09 AM
Last Updated : 22 Nov 2014 10:09 AM

எபோலா: விமான நிலையங்களில் உஷார்

எபோலா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 25 விமான நிலையங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் லைபீரியாவில் இருந்து டெல்லிக்கு வந்த 26 வயது இளைஞருக்கு எபோலா வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும் எபோலாவால் இதுவரை 5177 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த பிராந்தியத்தில் சுமார் 45 ஆயிரம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் நாடு திரும்பும்போது முழுமையாக மருத்துவப் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 25 விமான நிலையங்களில் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x