Last Updated : 19 Feb, 2014 12:00 AM

 

Published : 19 Feb 2014 12:00 AM
Last Updated : 19 Feb 2014 12:00 AM

கேஜ்ரிவால் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு

ஊழல் அரசியல்வாதிகள் பட்டியலில் தனது பெயரை சேர்த்ததை எதிர்த்து, அர்விந்த் கேஜ்ரிவால் மீது பா.ஜ.க முன்னாள் தேசிய தலைவர் நிதின் கட்கரி டெல்லி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கடந்த ஜனவரி 31-ம் தேதி டெல்லியில் நடந்த, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில், நாட்டின் ஊழல் அரசியல்வாதிகள் பட்டியலை கேஜ்ரிவால் வெளியிட்டார். இதில் நிதின் கட்கரியின் பெய ரும் இருந்தது. இந்நிலையில் கேஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் நிதின் கட்கரி அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இம்மனுவை விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொண்ட நீதிபதி கோமதி மனோச்சா, கட்கரியின் மனுவுக்கு வலு சேர்க்கும் வகையில் அவரது வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்ய உத்தரவிட்டார்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x