Published : 27 Nov 2014 10:50 AM
Last Updated : 27 Nov 2014 10:50 AM

ஜம்முவில் தீவிரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு

ஜம்முவில் தீவிரவாதிகள் ஊடுருவல் முறியடிக்கப்பட்டது. 48 மணி நேரத்தில் 2 ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பஞ்ஜினி நல்லா பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.

ராணுவத்தினர் நடத்திய தாக்குதலை சமாளிக்க முடியாமல் தீவிரவாதிகள் பின்வாங்கினர்.

காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் இந்த ஊடுருவல் முயற்சி நடத்தப்பட்டுள்ளது. ஆனால், ராணுவத்தினர் வெற்றிகரமாக ஊடுருவல் முயற்சியை முறியடித்துள்ளனர்" என்றார்.

பூஞ்ச் மாவட்டத்தின் ஹவேலி, சுரான்கூர், மேந்தார் பகுதிகளில் டிசம்பர் 2-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x