Published : 25 Nov 2014 10:08 AM
Last Updated : 25 Nov 2014 10:08 AM
எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத நிலையில் தனிப்பெரும் எதிர்க் கட்சியின் தலைவர், சிபிஐ இயக்குநர் தேர்வுக் குழுவில் உறுப்பினராக இடம்பெற வழிவகுக்கும் வகையில் சட்டத் திருத்தத்தை கொண்டு வர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்படும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோர் கொண்ட குழு, சிபிஐ இயக்குநரை தேர்வு செய்கிறது. இந்த குழுவின் பரிந்துரையை ஏற்று சிபிஐ இயக்குநரை மத்திய அரசு நியமிக்கிறது.
தற்போதைய மக்களவையில் எந்த கட்சிக்கும் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்க வில்லை. இதனால், சிபிஐ இயக்குநர் தேர்வில் எதிர்க்கட்சி யின் பங்களிப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எதிர்க் கட்சியின் தலைவர் என்பதற்கு பதிலாக, இருப்பதிலேயே அதிக எம்.பி.க்களை கொண்டுள்ள எதிர்க்கட்சியின் தலைவரை சிபிஐ இயக்குநர் தேர்வுக் குழுவில் உறுப்பினராக நியமிக்க மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்படவுள்ள டெல்லி சிறப்பு காவல்துறை சட்டத் திருத்த மசோதாவில், மேலும் சில சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படவுள்ளன. அதாவது, குழுவில் உள்ள உறுப்பினர் பதவியிடங்களில் ஏதாவது ஒன்று காலியாக இருந்தாலோ, தேர்வுக் குழுக் கூட்டத்தில் உறுப்பினர் யாராவது பங்கேற்காமல் இருந் தாலோ, அந்நிலையில் தேர்வு செய்யப்படும் சிபிஐ இயக்குநரின் நியமனம் சரியானதுதான் என்ற வகையில் விதிமுறையில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.
இந்த மசோதா எம்.பி.க்களின் பார்வைக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளது. இந்த மசோதா, நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT