Published : 16 Nov 2014 09:57 AM
Last Updated : 16 Nov 2014 09:57 AM
ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம், குன்ட்டி மாவட்டத்தில் முக்கிய சாலை ஒன்றில், நக்ஸலைட்கள் புதைத்து வைத்திருந்த 40 கிலோ வெடிகுண்டை பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றி அழித்தனர்.
அரசியல் தலைவர்கள் அதிகம் பயணம் செய்யும் சாலையில் இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT