Published : 29 Nov 2014 10:46 AM
Last Updated : 29 Nov 2014 10:46 AM
ஹைதராபாத் அருகே உள்ள ரங்காரெட்டி மாவட்டம், ஹயாத் நகர் மண்டலம், பாடிசிங்காரம் கிராமத்தை சேர்ந்த மாணவன் உதய்கிரண் (12). கடந்த புதன் கிழமை பள்ளிக்குச் சென்ற உதய்கிரண் பிறகு வீடு திரும்ப வில்லை. பெற்றோர் பல இடங் களில் தேடியும் காணவில்லை. இதையடுத்து அவர்கள் சரூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்நிலையில் நேற்று காலை, வனஸ்தலிபுரம், சிந்தலகுண்டா பகுதியில் உள்ள ஏரியில் சிறுவனின் சடலம் மிதப்பதாக தெரியவந்தது. உடலை மீட்ட போலீஸார், இது உதய்கிரணின் சடலம் என உறுதிப்படுத்தினர். இம்மாணவன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
முன்விரோதம் காரணமாக மாணவன் கொலை செய்யப்பட்டி ருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT