Published : 27 Nov 2014 10:26 AM
Last Updated : 27 Nov 2014 10:26 AM
உலக அளவில் அங்கீகாரம் பெறக்கூடிய வகையிலான புதிய கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கோரிக்கை விடுத்துள்ளார்.
‘தேசியவாதக் கல்வி’ என்ற தலைப்பில் நாக்பூரில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: தற்போதைய கல்வித் திட்டத்தின் மேல் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கல்வி கற்பிக்கும் முறையில் விரிவான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
பண்டைய காலங்களில் கல்வி கற்பிப்பதில் இந்தியாதான் உலகுக்கே வழிகாட்டும் வகையில் இருந்தது. தற்போது, மீண்டும் அந்த பண்டைய முறையை நோக்கி பல்வேறு நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. பல நூற்றாண்டுகளாக தலைமைப் பண்பில் உலகுக்கே வழிகாட்டியாக திகழ்ந்தோம். அந்த பெருமையை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும்.
உலக அளவில் ஒப்புக்கொள்ளப்படக்கூடிய வகையிலான புதிய கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT