Published : 05 Nov 2014 11:10 AM
Last Updated : 05 Nov 2014 11:10 AM

சிறைக் கைதியுடன் ‘பார்ட்டி’ கொண்டாடிய 4 போலீஸார் மீது வழக்கு

ஹரியாணாவில் நீதிமன்ற விசாரணைக்காக சிறையில் இருந்து அழைத்து செல்லப்பட்ட கைதியுடன் ‘பார்ட்டி’ நடத்திய 4 போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி டெல்லி காவல்துறை துணை ஆணையர் ராஜ்வீர் யாதவ் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள விஜய் பரத்வாஜ், ஹரியாணா மாநிலத்தின் குர்காவ்னில் உள்ள போன்ட்ஸி சிறையில் விசாரணைக் கைதியாக அடைக் கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கின் விசார ணையில் ஆஜர்படுத்துவதற்காக பஞ்ச்குலா நீதிமன்றத்துக்கு விஜய் பரத்வாஜை சிறையி லிருந்து 4 போலீஸார் நேற்று முன்தினம் அழைத்துச் சென்றனர். ஆனால், அவரை நேராக நீதிமன்றம் கொண்டு செல்லாமல், வழியில் உள்ள பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு போலீஸாருடன் சேர்ந்து விஜய் பரத்வாஜ் ‘பார்ட்டி’ நடத்திக் கொண்டிருப்பதை கேள்விப்பட்ட ஹரியாணா கிரைம் பிரிவு போலீஸார், பண்ணை வீட்டை சுற்றி வளைத்தனர்.

அங்கு விஜய் பரத்வாஜுடன் இருந்த தலைமைக் காவலர் தனசிங், காவலர்கள் ரிங்கு, பவண், நரேஷ் ஆகியோர் கையும் களவுமாக சிக்கினர். இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x