Published : 01 Nov 2014 11:25 AM
Last Updated : 01 Nov 2014 11:25 AM
மதுபார்களை மூடும் கேரள அரசின் உத்தரவுக்கு ஒரு மாதம் இடைக்காலத் தடை விதித்துள்ள கேரள உயர் நீதிமன்றம், 250 பார்கள் இயங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது.
சிறு மற்றும் நடுத்தர விடுதிகளில் செயல்படும் 250 மது பார்களை மூடும் அரசின் உத்தரவை கேரள உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உறுதி செய்தது. நீதிபதி சுரேந்திர மோகன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இதை எதிர்த்து மது பார் உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்தனர்.
இம்மனு, நீதிபதிகள் தோத்தாத்தில் பி ராதாகிருஷ்ணன், பாபு மேத்யூ பி ஜோசப் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு நேற்று விசா ரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 29-ம் தேதி இருந்த நிலை தொடர நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இதன்மூலம் ஒரு மாதத்துக்கு விடுதிகள் செயல்படலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT