Published : 01 Oct 2013 03:38 PM
Last Updated : 01 Oct 2013 03:38 PM

காங். எம்.பி. ரஷீத் மஸூத்-துக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

எம்.பி.பி.எஸ். சேர்க்கை இடங்களில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ரஷீத் மஸூத்-துக்கு 4 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், ஓய்வு பெற்ற அதிகாரிகள் இருவருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 9 மாணவர்களுக்கு தலா ஓர் ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

எம்.பி.பி.எஸ். சேர்க்கை இடங்களுக்கு முறைகேடு செய்ததாக, காங்கிரஸ் எம்.பி. ரஷீத்தை குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 19-ம் தேதி அறிவித்தது.

தற்போது, தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அவர் உடனடியாக எம்.பி. தகுதியை இழப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x