Published : 04 Nov 2014 11:56 AM
Last Updated : 04 Nov 2014 11:56 AM
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது. டெல்லி அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் மறுதேர்தல் நடத்த பாஜக உட்பட அனைத்துக் கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, டெல்லி சட்டப் பேரவையை கலைக்க பரிந்துரைத்து குடியரசுத் தலைவருக்கு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அறிக்கை அனுப்பினார்.
இந்நிலையில், டெல்லியில் தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT