Published : 19 Nov 2014 03:44 PM
Last Updated : 19 Nov 2014 03:44 PM

நிலப்பிரச்சினை: விவசாயி கொலை, தம்பி கைது

ஓசூர் ராயக்கோட்டை அருகே உள்ள சொன்னே நாயக்கன அள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (40). விவசாயி. இவரது தம்பி தாயப்பன் (37).

இவர்களுக்குள் நிலப்பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தாயப்பன் கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ரஞ்சனி ஆகியோரை சரமாரியாக வெட்டினார்.

இதில் படுகாயம் அடைந்த இருவரும், தருமபுரி அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர்மேல் சிகிச்சைக்காக பெங்களூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கிருஷ்ணன், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.இதையடுத்து ராயக்கோட்டை போலீஸார் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்து தாயப்பனை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x