Published : 12 Nov 2014 12:32 PM
Last Updated : 12 Nov 2014 12:32 PM
நாட்டின் முதல் பிரதமரான நேருவின் 125-வது பிறந்த தினத்தை முன்னிட்டு வரும் 17,18-ம் தேதிகளில் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு இல்லை.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியது: ஜனநாயகத்தின் மீது, நேருவின் கருத்துகளின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நமது பிரதமருக்கு நாங்கள் அழைப்பிதழ் அனுப்பவில்லை. ஓர் அரசியல் கட்சியாக எங்கள் விழாவுக்கு யாரெல்லாம் வர வேண்டும் என்பதை முடிவு செய்ய எங்களுக்கு உரிமை உண்டு என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT