Published : 27 Nov 2014 09:59 AM
Last Updated : 27 Nov 2014 09:59 AM

இ‍ விசா திட்டம் இன்று முதல் அமல்: 43 நாடுகளுக்கு அனுமதி

இன்று (27-ம் தேதி) முதல் இந்தியாவில் ‘இ விசா' திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சுமார் 43 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியா வந்தவுடன் விமான நிலையங்களில் இணையம் மூலம் விண்ணப்பித்து சில நாட்களுக்குள் விசா பெற்றுக் கொள்ளலாம்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதற்காக, ஏற்கெனவே உள்ள குடியுரிமை சட்டம் உள்ளிட்ட சில சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்தின் மூலம் அமெரிக்கா, பிஜி தீவுகள், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இஸ்ரேல் உள்ளிட்ட 43 நாடுகள் பயனடையும் என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x