Published : 25 Oct 2014 11:30 AM
Last Updated : 25 Oct 2014 11:30 AM

ஆட்சி அமைக்க பாஜக எம்எல்ஏக்கள் 27-ல் ஆலோசனை

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப் பது குறித்து பாஜக எம்எல்ஏக்கள் கலந்தாய்வு கூட்டம் திங்கள்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக பாஜக வட்டாரம் கூறியதாவது: பாஜக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறும். அதற்குப் பிறகே, ஆட்சி யமைப்பது குறித்த இறுதி முடிவு எட்டப்படும். மாநில பாஜக தலைவர் தேவேந்திர பட்நாவிஸ்தான் முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார்.

ஆட்சியமைப்பது குறித்த இறுதி முடிவு எடுக்க ஒருவாரம் ஆகும். இடைப்பட்ட காலத்தில் யாரெல்லாம் அமைச்சரவையில் இடம்பெறுவது என்ற பட்டியல் தயார் செய்யப்படும்.

இதில், பாஜக எம்எல்ஏக்கள் மட்டுமே இதுவரை பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர். சிவசேனாவுக்கு அமைச்சரவையில் இடமளிப்பது குறித்து தற்போது கருத்து கூற முடியாது. இவ்வாறு, பாஜகவினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x